Friday 6 February 2015

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 4


திருக்குறள்:
சொல்பொருள்:
*
இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
*
ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
*
வன்சொல் - கடுஞ்சொல்

*
எவன்கொலோ - ஏனோ?
*
சிறுமை - துன்பம்
*
மறுமை - மறுபிறவி
*
இம்மை - இப்பிறவி
*
நாடி - விரும்பி
*
அல்லவை - பாவம்
*
தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்
*
அணி - அழகுக்காக அணியும் நகைகள்
*
துவ்வாமை - வறுமை
*
இன்புறூஉம் - இன்பம் தரும்
*
அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
*
முகன் - முகம்
*
இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்
*
ஈரம் - அன்பு
*
அளைஇ - கலந்து
*
செம்பொருள் - மெய்ப்பொருள்
*
கவர்தல் - நுகர்தல்
செய்யும் தொழிலே தெய்வம்
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.
காலம்: 13.04.1930 - 08.10.1959
மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
தனது பாடல்களில் உழக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.
** 
சில பாடல் வரிகள்:
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
"
பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்"
"
காயும் ஒரு நாள் கனியாகும் -நம்
கனவும் ஒரு நாள் நனவாகும்"
உரைநடை: கல்லிலே கலைவண்ணம்
* காவிரி பாயும் சோழவள நாடு, அது கலைகளின் விளைநிலம், வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் - கும்பகோணம்.
*
கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் - தாராசுரம்
*
இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
*
நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் - ஐராவதீசுவரர் கோவில்
*
முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
*
யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரிபோர்த்தவர்(கஜம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
*
அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
*
கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் சரிகமபதநி எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
*
தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார்.
*
தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றன. இதை மரபு அடையாளச்சினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கோவிலை கலைகளின் சரணாலயம் என்றே கூறலாம்.
துணைப்பாடம்: சாதனைப் பெண்மணி மேரி கியூரி
* கியூரி அண்மையார் 1876 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.
*
தனது மூத்த சகோதரியின் விருப்பமான மருத்துவ கல்வி பயில்வதை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்ததும், செவிலிபோல் * பணிவிடைகள் செய்தும் பொருளீட்டி உதவினார்.
*
மேரிக்கு போலந்தில் அறிவியல் கல்வி மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அறிவியல் கல்வி பயின்றார்.
*
அறிவியல் மேதை பியுரிகியூரியை, மேரி திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
*
மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
*
இடைவிடாத ஆராய்ச்சியின் பயனாக, கணவன், மனைவி இருவரும் முதலில் பொலோனியும் என்னும் பொருளை கண்டுபிடித்தனர்.
*
அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவிடாது ஆராய்ச்சி செய்து ரேடியம் என்னும் பொருளை கண்டுப்பிடித்தனர். இவ்விரண்டு அறிய கண்டுபிடிப்புகளுக்காக மேரி கியூரிக்கும் அவர் கணவருக்கும் 1903ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
*
இவரின் கண்டுபிடிப்பைப் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன் வந்த போதும் தனது அறிவியல் கண்டுபிடிப்பை அறிவியல் உலகிற்கே கொடையாக கொடுத்தார்.
*
மேலும் அவருக்கு இரண்டாவது முறையாக 1911 ஆண் ஆண்டு ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
*
மேரி கியூரி 1934 இல் இயற்கை எய்தினார்.
*
கியூரியின் இறப்பிற்குப்பின் அவர் மகள் ஐரினும், மருமகன் சாலிட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக 1935 ஆண் ஆண்டு நோபல் பரிசினை பெற்றனர்.
*
ஓரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
*
நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி.

தனிப்பாடல்
சொற்பொருள்:
*
இரட்சித்தானா? - காபாற்றினானா?
*
அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
*
பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
*
குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய்
*
குரைகடல் - ஒலிக்கும் கடல்

நூல் குறிப்பு:
*
புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை தனிப்பாடல் திரட்டு என்னும் நூலக தொகுத்துள்ளனர்.
*
பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
*
இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.
அந்த காலம் இந்த காலம்
ஆசிரியர் குறிப்பு:
*
உடுமலை நாராயண கவி தமிழ்த் திரைப்பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
*
சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
*
பகுத்தறிவு கவிராயர் என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டவர்.
காலம்: 25.09.1899 - 23.05.1981
தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்
* டிவி - தொலைக்காட்சி
*
ரேடியோ - வானொலி
*
டிபன் - சிற்றுண்டி
*
டீ - தேநீர்
*
டெலிபோன் - தொலைபேசி
*
கரண்ட் - மின்சாரம்
*
ஃபேன் - மின்விசிறி
*
சேர் - நாற்காலி
*
லைட் - விளக்கு
*
டம்ளர் - குவளை
*
சைக்கிள் - மிதிவண்டி
*
பிலாட்பாரம் - நடைப்பாதை
*
ஆபிஸ் - அலுவலகம்
*
சினிமா - திரைப்படம்
*
டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
*
ரோடு - சாலை
*
பிளைட் - விமானம்
*
பேங்க் -  வங்கி
*
தியேட்டர் - திரை அரங்கு
*
ஆல்பத்திரி - மருத்துவமனை
*
கம்ப்யூட்டர் - கணினி
*
காலேஜ் - கல்லூரி
*
யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
*
டெலஸ்கோப் - தொலைநோக்கி
*
தெர்மோமீட்டர் - வெப்பமானி
*
இன்டர்நெட் - இணையம்
*
இஸ்கூல் - பள்ளி
*
சயின்ஸ் - அறிவியல்
*
மைக்ரோஸ்கோப் - நுண்ணோக்கி
*
நம்பர் - எண்
நாடும் நகரமும்
நாடு:  நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
*
மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
*
நாளடைவில் நாடுகளின் உட்பிவுகளும் "நாடு" என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
*
முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று.
*
இப்பொழுது அப்பெயர் பொருணை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில்லுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
*
சோழநாட்டில் மாயவரத்திற்கு அடுத்துள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கப்படுகிறது.
*
கூர்ரைநாடு என்பது கொரநாடு என்று மருவிற்று.
*
பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.

நகரம்: சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பலம்பெரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
*
பாண்டியநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராகா விளங்குகிறது.
*
இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.

சென்னை: திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம்.
*
அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.

புரம்: புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெற்ற ஊர் பின்னர் "புரம்" என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம்(பல்லாவரம்), சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
பட்டிணம்: கடற்கரையில் உருவாகும் நகரங்கள் "பட்டிணம்" எனப் பெயர் பெரும். காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், சதுரங்கபட்டிணம் ஆகியவை "பட்டிணம்" எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.
பாக்கம்: கடற்கரைச் சிற்றூர்கள் "பாக்கம்" எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் பாக்கம் எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம்: கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் பாக்கம் எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம்: புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமராபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கும்பம்: நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் குப்பம் என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
ஆசிரியர்: சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் "ஊரும் பேரும்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
குற்றாலக் குறவஞ்சி
சொற்பொருள்:
*
வானரங்கள் - ஆண் குரங்குகள்
*
மந்தி - பெண் குரங்குகள்
*
வான்கவிகள் - தேவர்கள்
*
காயசித்தி - இறப்பை நீக்கும் மூலிகை
*
வேணி - சடை
*
மின்னார் - பெண்கள்
*
மருங்கு - இடை

நூல் குறிப்பு:
*
இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர்.
*
குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.

மரமும் பழைய குடையும்
சொற்பொருள்:
*
கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்
*
பீற்றல் குடை - பிய்ந்த குடை

ஆசிரியர் குறிப்பு:
*
அழகின் சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
*
இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:
*
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது "சிலேடை" எனப்படும்.
*
இதனை "இரட்டுறமொழிதல்" (இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது.

இலக்கணமும் மொழித்திறனும் நாட்டுப்புறத் தமிழ் அறிவோம்
*
கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க...?
ஆனம் என்பதன் பொருள் - குழம்பு
*
அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா?
நாழி என்பதன் பொருள் - தானியங்களை அளக்கும் படி
*
அகவிலை என்பதன் பொருள் - தானிய விலை
*
திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு?
திறவுகோல் என்பதன் பொருள் - சாவி
*
ஒற்று எனப்படுவது - மெய்யெழுத்து
ஒற்றெழுத்தைச் சேர்த்து எழுதுக:
பாடலை + சொன்னேன் = பாடலைச் சொன்னேன்
கடவுளை + கண்டேன் = கடவுளைக் கண்டேன்
பழத்தை + தின்றேன் = பழத்தைத் தின்றேன்
கண்ணனுக்கு + கொடுத்தேன் = கண்ணனுக்குக் கொடுத்தேன்
மதுரைக்கு + செல்வோம் - மதுரைக்துச் செல்வோம்


No comments:

Post a Comment