Friday 6 February 2015

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 02

151. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?38
152. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?இங்கிலாந்து
153. விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?துரோணாச்சாரியார்
154. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?2009 (தலைமையகம் கலிபோர்னியா)
155. 2014-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்றது எத்தனையாவது உலக கால்பந்து போட்டி?20-வது
156. உலக கால்பந்து கோப்பையை ஜெர்மனி எத்தனை முறை வென்றுள்ளது?4 முறை (1954, 1974, 1990, 2014)
157. 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2014-ல் நடந்த நாடு எது?ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகர்
158. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?கல்கத்தா பல்கலைக்கழகம்
159. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?1 லட்சத்து 55 ஆயிரம்
160. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?2.4 லட்சம்
161. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?17
162. மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் எது?நாமக்கல்
163. தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?ஏற்காடு
164. நிலவொளி பூமியை வந்தடைய ஆகும் காலம் எவ்வளவு?1.3 வினாடி
165. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மெய்க்கீர்த்திகள் எனப்பட்டவை எவை?அரசின் சாதனை வரலாறு
166. செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?1988
167. ஐ.நா.சபையின் முதல் பொதுச்செயலாளர் யார்?டிரைக்வே (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்)
168. சியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு எது?தாய்லாந்து
169. நைல் நதி எந்த கடலில் கலக்கிறது?மத்திய தரைக்கடல்
170. காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?பிரிட்டன்
171. உலக உணவு நாள் கொண்டாடப்படும் தினம் எது?அக்டோபர் 16
172. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்?மார்ச் 22
173. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?தென்னாப்பிரிக்கா
174. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது?ருமேனியா
175. உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?ரஷ்யாவில் உள்ள கார்கோல்
176. ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது?முப்பந்தல்
177. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது?நேபாளம்
178. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது?இந்தோனேசியா
179. உலக தூய்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது?செப்டம்பர் 19
180. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?டென்மார்க்
181. தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடங்கள் எவை?மீஞ்சூர், நெம்மேலி
182. பார்வை இல்லாதவர்களுக்கான எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?லூயி பிரெய்லி
183. ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?மலைக்கள்ளன்
184. ஆசிய வளர்ச்சி வங்கி அமைந்துள்ள இடம் எது?மணிலா
185. உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?மலேசியா
186. சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட நாள் எது?26.6.1862
187. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?2004
188. சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி திட்டம்) என்பது என்ன?
14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 8-ம் வகுப்பு வரை கல்வி அளிக்கும் திட்டம்
189. கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி எது?
கோபிநாத் கமிட்டி
190. "The Audacity of Hope" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?அமெரிக்க அதிபர் ஒபாமா.
191. தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் பெயர் என்ன?.
யூரோ-ஜூரோ திட்டம்
192. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?50
193. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?பலாஹி (பஞ்சாப்)
194. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?1835, சென்னை
195. இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?18 லட்சம்
196. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?ஜோத்பூர்
197. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?டெஹ்ராடூன்
198. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?நீலகிரி
199. ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?ரோம்
200. மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?டெட்ராய்டு (அமெரிக்கா)
201. ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1986
202. பின்கோடு திட்டத்தின்படி நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?8 மண்டலங்கள்
203. முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?ராகேஷ் சர்மா
204. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?குடியரசுத் தலைவர்
205. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?மறைமுகத் தேர்தல்
206. எந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா கடைசியாக தங்கப் பதக்கம் வென்றது?மாஸ்கோ (1980)
207. தமிழ்நாட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?மணலி (சென்னை)
208. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?1935
209. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?தூத்துக்குடி
210. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ("இஸ்ரோ ") தலைவர் யார்?கே.ராதாகிருஷ்ணன்
211. ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார் ?ரகுராம்ராஜன்
212. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் யார்?வி.எஸ்.சம்பத்
213. கார்கில் போர் எப்போது நடந்தது?1999
214. "Wealth of Nations" என்ற நூலை எழுதியவர் யார்?ஆதம் ஸ்மித்
215. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு
216. 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு எது?பிரேசில் (2016)
217. இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது?கொல்கத்தா (1973)
218. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது?ஜப்பான்
219. கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?சுகாதார பாரத் இயக்கம்
220. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன?ஸ்வாலம்பன்
221. மதிப்பு கூட்டுவரி (Value Added Tax-VAT) எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?2003
222. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization-ILO) எங்குள்ளது?ஜெனீவா
223. பிரதம மந்திரி கிராமோதயா திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?2000
224. இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?63
225. ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்
226. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?முதலாம் குமாரகுப்தர்
227. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது எது?தேசிய வளர்ச்சிக்குழு
228. சந்திரக்கடல் என்றால் என்ன?சந்திரனில் உள்ள இருண்ட சமவெளி
229. இந்தியாவில் கிராம அமைப்பில் உள்ள குடும்ப முறை என்ன?கூட்டுக்குடும்பம்
230. தேம்பாவணி என்ற நூலின் ஆசிரியர் யார்?வீரமா முனிவர்
231. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு எது?கல்லீரல்
232. சேரர்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?பதிற்றுப்பத்து
233. அணுக்கொள்கையை முதன்முதலில் வெளியிட்டவர் யார்?ஜான் டால்டன்
234. முதுகெலும்புத் தொடரில் உள்ள முள்ளெழும்புகளின் எண்ணிக்கை எத்தனை?33
235. ஆயுர்வேத மருத்துவ முறையில் இருந்து தோன்றிய மருத்துவ முறை எது?சித்த மருத்துவம்
236. தமிழகக் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழியாக எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?1970
237. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?பசிபிக் பெருங்கடல்
238. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?ஆண்டிஸ் மலைத்தொடர்
239. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரம் எது?அபு சிகரம்
240. இந்தியாவின் திட்ட நேரம் எந்த தீர்க்கரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது?82.5 டிகிரி கிழக்கு
241. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?உலார் ஏரி
242. மக்களவையில் (லோக் சபா) அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?544
243. அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?குடியரசு தலைவர்
244. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது?இந்திய தேர்தல் ஆணையம்
245. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியலமைப்பு ஷரத்து எது?370
246. ராஜ்யசபா உறுப்பினராக குறைந்தபட்ச வயது எத்தனை?30
247. துணை குடியரசு தலைவரை தேர்வு செய்வது யார்?லோக் சபா மற்றும் ராஜ்ய சபாஉறுப்பினர்கள்
248. மக்களவைக்கு குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?2
249. மக்கள் நல அரசு என்னும் கோட்பாடு பற்றி அரசியலமைப்பின் எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
பகுதி - 4
250. குடியரசு தலைவர் பதவி விலகினால் தமது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிப்பார்?
துணை குடியரசு தலைவர்
251. தற்போது அடிப்படை உரிமைகள் எத்தனை தலைப்புகளில் உள்ளன?ஆறு
252. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது குறிப்பிடப்படும் ஷரத்து எது?ஷரத்து 16
253. தமிழ்நாட்டில் மிக நீளமான அணைக்கட்டு எது?பவானி சாகர்
254. தமிழகத்தின் முதல் மாநகராட்சி எது?சென்னை மாநகராட்சி (1688-ல் மாநகராட்சி ஆனது)
255. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என போற்றப்பட்டவர் யார்?பெரியார் ஈ.வெ.ரா.
256. தமிழக அரசின் சின்னம் எப்போது உருவாக்கப்பட்டது?1950-ம் ஆண்டு பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டது
257. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?திருவாரூர்
258. தமிழகத்தின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எந்த ஆண்டு யாரால் எழுதப்பட்டது?
1879-ம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை
259. அக்கினிக் குஞ்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?பாரதியார்
260. தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் எங்குள்ளன?தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி
261. உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?பிப்ரவரி 4
262. உலகிலேயே அதிகளவு மீன் பிடிக்கும் நாடு எது?ஜப்பான்
263. அரேபியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் இடையே உள்ள கடல் எது?செங்கடல்
264. கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?பாதோம் மீட்டர்
265. தமிழ்நாட்டில் வாயுமின் நிலையங்கள் எங்குள்ளன?
பேசின்பிரிட்ஜ் (சென்னை), நரிமணம், பிள்ளை பெருமாள் நல்லூர்
266. சென்னை தொலைக்காட்சி நிலையம் எப்போது தொடங்கப்பட்டது?15.8.1975
267. தமிழில் முதன்முதலில் தோன்றிய அகராதி எது? அதை தொகுத்தவர் யார்?
சதுரகராதி, தொகுத்தவர் வீரமாமுனிவர்
268. தமிழின் தொன்மையான நூல் எது?தொல்காப்பியம்
269. தமிழ் இலக்கிய அகராதியை 18-ஆம் நூற்றாண்டில் தொகுத்தவர்கள் யார்?ஐரோப்பிய பாதிரியார்கள்
270. சிங்கவால் குரங்குகளின் காப்பகம் எது?நெல்லை மாவட்டம் களக்காடு
271. எம்.விஸ்வேஸ்வரய்யாவால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கம் எது?
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் நீர்த்தேக்கம்
272. சென்னை மாநகரின் முதல் ஷெரீப் யார்?பி.ரங்கநாத முதலியார்
273. பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?ஆறுமுக பாவலர்
274. தென்னிந்தியாவின் முதல் தமிழ் தினசரி எது?சுதேசமித்திரன்
275. சென்னையின் முதல் மேயர் யார்?சர் முத்தையா செட்டியார்
276. தமிழ்நாட்டில் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?விருதுநகர்
277. முதன்முதலில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?ஜி.யு.போப்
278. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?இரண்டாம் நரசிம்மவர்மன்
279. மதுரை மீனாட்சி கோவில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?16-ம் நூற்றாண்டில்
280. தமிழக கடற் கரையின் நீளம் எவ்வளவு?1076 கி.மீ
281. தமிழ்நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் எது?தொட்டபட்டா (நீலகிரி மலை)
282. தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் எது?ஆனைமுடி (ஆனைமலை)
283. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?நாமக்கல் மாவட்டம்
284. தமிழ்நாட்டில் "ஆர்ட்டிசன்" ஊற்றுகள் எங்குள்ளன?சோழ மண்டல கடற்கரை சமவெளி
285. காவிரி நதி நீர் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?1997
286. "இந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அருவி?ஒக்கேனக்கல்
287. காவிரி நதியின் நீளம் எவ்வளவு?760 கி.மீ.
288. தமிழகத்தில் நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்கள் எவை?
மதுரை, திருச்சி, ரங்கம், நெல்லை, வேலூர்
289. குருசடை தீவு எங்கு அமைந்துள்ளது?
மன்னார் வளைகுடாவில் மண்டபத்துக்கு அருகே. இது "சுற்றுச்சூழல் சொர்க்கம்" (Ecological Paradise) என்று அழைக்கப் படுகிறது.
290. ஆதாம் பாலம் எங்கு உள்ளது?
ராமேசுவரத்துக்கும் இலங்கை மன்னார் தீவுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளே ஆதாம் பாலம் என்றும், ராமர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 30 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம் மன்னார் வளைகுடாவையும், பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது.
291. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது?சென்னிமலை
292. தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?1980
293. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதிகள் யார்?
நீதிபதி முத்துசாமி அய்யர், நீதிபதி கிருஷ்ணசாமி அய்யர்
294. "ஸ்லம் டாக் மில்லினர்" படத்துக்காக கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் யார்?ஏ.ஆர்.ரகுமான்
295. இந்தியாவின் அரண்மனை நகரம் எது?கொல்கத்தா
296. டெல்லி எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?யமுனை
297. திட்டக்குழுவின் தலைவர் யார்?பிரதமர்
298. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?திருவனந்தபுரம்
299. அமைதிப் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?கேரளம்
300. ஸ்ரீநகர் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?ஜீலம்
301. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?தொட்டபட்டா (நீலகிரி)
302. Runs Ruins என்ற நூலை எழுதியவர் யார்?கவாஸ்கர்
303. இந்தியாவில் வானொலி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?1927
304. நரிமணம் எதற்கு பெயர்பெற்றது?பெட்ரோல்
305. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி எங்குள்ளது?ஹைதராபாத்
306. எய்ட்ஸ் நோயை உறுதிசெய்யும் பரிசோதனை எது?வெஸ்டன் பிளாட் சோதனை
307. சூரியனுக்கு அதிக தூரத்தில் உள்ள கிரகம் எது?புளூட்டோ
308. லாட்ஸ் கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது?லண்டன்
309. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?சென்னை அடையாறு
310. கடல் அலைகள் உண்டாக காரணம் என்ன?சந்திரன் சூரியன் புவியீர்ப்பு விசை
311. My Experiments with Truth என்ற நூலை எழுதியவர் யார்?காந்தி
312. ஹிராகுட் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?ஒடிஸா
313. எண்டோமாலஜி (Entomology) என்பது என்ன?பூச்சிகளைப் பற்றிய படிப்பு
314. வடகிழக்கு பருவக்காற்றினால் அதிகம் மழை பெரும் மாநிலம் எது?தமிழ்நாடு
315. தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு?1,30,058 ச.கி.மீ.
316. இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது?ஜார்கண்ட்
317. தென்னிந்தியாவில் மிக நீளமான நதி எது?கோதாவரி
318. இந்தியாவிலேயே வடிவமைக்கப் பட்ட அணுமின் திட்டம் எது?கல்பாக்கம்
319. கல்வியறிவு குறைவாக உள்ள மாநிலம் எது?பிஹார்
320. வடகிழக்கு பருவக்காற்று காலம் எது?அக்டோபர் முதல் டிசம்பர் வரை
321. சூரிய ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகும்?8 நிமிடங்கள்
322. இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?கொல்கத்தா
323. மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?கொடைக்கானல்
324. யுரேனியம் எந்த மாநிலத்தில் கிடைக்கிறது?ஜார்கண்ட்
325. மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் எது?சுந்தரவனம்
326. கோதுமை அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம்? எது?உத்தரப் பிரதேசம்
327. கரும்பு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?கோவை
328. தமிழ்நாட்டின் இரும்பு நகரம் எது?சேலம்
329. உலகிலேயே மைகா அதிகளவில் கிடைக்கும் நாடு எது?இந்தியா
330. இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?அனல்மின்நிலையம்
331. ஆக்டோபசுக்கு எத்தனை இருதயங்கள் காணப்படுகின்றன?மூன்று
332. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?1950
333. தென்னாப்பிக்க நாட்டின் அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?7 ஆண்டுகள்
334. தமிழ்நாட்டில் அதிகப்படியான தொடக்கப்பள்ளிகள் உருவாக காரணமாக இருந்தவர் யார்?காமராஜர்
335. தமிழ்நாட்டில் ஆடுவளர்ப்பில் முதலிடம் பெறும் மாவட்டம் எது?
ஈரோடு (2-ஆம் இடம் திருநெல்வேலி)
336. பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?சூரிய நாராயண சாஸ்திரி
337. The Primary Classical Language of the World என்ற நூலை எழுதியவர் யார்?தேவநேயபாவாணர்
338. தமிழ்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?உ.வே.சாமிநாத அய்யர் (உ.வே.சா.)
339. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்கள் எத்தனை?21
340. பல்லவர்களின் தலைநகரம் எது?காஞ்சிபுரம்
341. 1921-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி எது?நீதிக்கட்சி
342. இந்தியாவில் இருந்து எப்போது மியான்மர் (பர்மா) பிரிந்துசென்றது?1937
343. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த ஆண்டு?1492
344. பெண்களுக்கு முதன்முறையாக வாக்குரிமை அளித்த நாடு?நியூசிலாந்து
345. டைனமைட் எனும் வெடிமருந்தை கண்டுபிடித்தவர் யார்?ஆல்பிரட் நோபல்
346. ஹாரி பாட்டர் கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் என்ன?ராவ்லின்
348. லீப் வருடம் என்பது என்ன?366 நாட்கள் கொண்ட ஆண்டு
349. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது தோன்றும் கிரகணம் எது?சூரிய கிரகணம்
350. இந்தியாவின் புகழ்பெற்ற வானவியல் அறிஞர் யார்?ஆர்யபட்டர்
391. வாதாபி கொண்டான் என பெயர்பெற்ற மன்னர் யார்?நரசிம்ம வர்ம பல்லவர்
392. கல்லணையை கட்டியவர் யார்?கரிகால் சோழன்
393. சேரர்களின் கொடி எது?வில் கொடி
394. அக்பர் அவையில் இருந்த அரசவைப் புலவர் யார்?அபுல் பாசல்
395. அபுல் பாசல் இயற்றிய நூல்கள் எவை?அயினி அக்பரி, அக்பர் நாமா
396. அக்பர் நிர்மாணித்த அழகிய நகரின் பெயர் என்ன?பதேபூர் சிக்ரி
397. தேச பந்து என அழைக்கப்பட்டவர் யார்?சித்தரஞ்சன்தாஸ்
398. நெப்போலியன் தோல்வி அடைந்த இடம் எது?வாட்டர் லூ எனப்படும் பெல்ஜிய கிராமம்
399. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எப்போது வந்தது?1858
400. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி நாடுகள் எந்த ஆண்டு ஒன்றாக இணைந்தன?1990
401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார்?மெகஸ்தனிஸ் (கி.மு. 303)
402. வாஸ்கோடகமா இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடித்த ஆண்டு?1498
403. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?ஹர்ஷர்
404. ஹர்ஷர் இயற்றிய நூல்கள் எவை?நாகானந்தா, ரத்தினாவலி, பிரியதர்ஷிணி
405. ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?வெண்கலம்
406. புத்தரின் இயற்பெயர் என்ன?சித்தார்த்தா
407. இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் யார்?வின்ஸ்டன் சர்ச்சில்
408. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?ஹோவாங்கோ
409. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு?ஹோவாங்கோ ஆறு
410. சாளுக்கியர்களின் தலைநகரம் எது?வாதாபி
411. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட மன்னன் யார்?ராஜேந்திர சோழன்
412. அடிமை வம்சத்தை நிறுவியர் யார்?குத்புதீன் ஐபெக்
413. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?ரஸியா பேகம்
414. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ?ஜலாலுதீன் கில்ஜி
415. துக்ளக் அரசை வீழ்த்தியவர் யார்?தைமூர்
416. சோழர் காலத்தில் கிராம வாரியங்களின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டனர்?
குடவோலை முறை
417. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?குருநானக்
418. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?5,000 ஆண்டுகள்
419. காஷ்மீர் ராஜாக்கள் பற்றி கூறும் நூல்?சாகுந்தலம்
420. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது எது?கைபர் கணவாய்
421. இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீன யாத்திரீகர்?பாஹியான்
422. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்?சமுத்திர குப்தர்
423. பிளாசி போர் எப்போது நடந்தது?கி.பி. 1757
424. கிராண்ட் டிரங் நெடுஞ்சாலையை அமைத்தவர் யார்?ஷெர்ஷா சூரி
425. டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்?ஷாஜகான்
426. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்?இந்திரன்
427. சிந்துசமவெளி நாகரீகத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம் எது?லோத்தால்
428. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?கால்நடை வளர்ப்பு
429. சமணர்களின் புனித நூல் எது?ஆகம சித்தாந்தங்கள்
430. மன்னருக்கு வரிக்குப் பதில் இலவசமாக உடல் உழைப்பை தரும் முறையின் பெயர் என்ன?
வைஷ்டிகா
431. மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் வரை பிரதமர் நியமிக்கலாம்?
நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் 10 சதவீதம் வரை
432. இந்தியாவில் நிறுத்தப்பட்ட தந்தி சேவையை ஈடுகட்ட மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றுமுறை எது?இ-போஸ்ட்
433. "நாங்கள் வெறும் அணி அல்ல, நாடு" என 2014 உலக கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஒரு நாட்டின் தாரக மந்திரமாக குறிப்பிடப்பட்டது. அது எந்த நாடு?அர்ஜெண்டினா
434. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் எப்போது ஏவப்பட்டது5.11.2013
435. மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த நாள் எது?
24.9.2014
436. மங்கள்யான் எந்த ராக்கெட் அனுப்பும் தளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது?ஸ்ரீஹரிகோட்டா
437. குஜராத் மாநில முதல்-அமைச்சர் யார்?ஆனந்தி பென் படேல்
438. ஒடிசா முதல்-அமைச்சரான நவீன் பட்நாயக் எத்தனையாவது முறையாக தொடர்ந்து முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறார்?4-வது முறை
439. இந்த ஆண்டு செய்தித்தாள்களில் "SIMBEX14" என குறிப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது. அது என்ன?
இந்திய கடற்படையும், சிங்கப்பூர் கடற்படையும் இணைந்து இரு நாடுகளின் நல்லுறவை தெரிவிக்கும் வகையில் அந்தமான் கடலில் நடத்திய வருடாந்திர ஒத்திகை
440. 2014-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது பெற்றவர் யார்?விஜய் சேஷாத்திரி
441. 2013-ம் ஆண்டுக்கான தாதாசாகிப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது?குல்சார்
442. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது இந்திய தேர்தல் ஆணையம் National Icon என ஒரு திரைப்பட நடிகரை அறிவித்தது. அந்த நடிகர் யார்?அமீர்கான்
443. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?ஜி.ரோகிணி
444. 2014-ம் ஆண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது யாருக்கு வழங்கப்பட்டது?மாதங்கி சத்தியமூர்த்தி
445. இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது?2015-ம் ஆண்டு
446. அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்-அமைச்சர் யார்?நபம்துகி
447. உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?நார்வே
448. 20-வது காமன்வெல்த் விளையாட்டு எந்த நாட்டில் நடைபெற்றது?ஸ்காட்லாந்து (கிளாஸ்கோ)
449. அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த ஆண்டுக்குள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்?2016-ம் ஆண்டு இறுதியில்
450. 2014-ம் ஆண்டில் இந்திய அழகி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?கோயல்ரானா
451. பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கியின் பெயர் என்ன?பாரதீய மகிளா வங்கி (19.11.2013)
452. கண்டம் விட்டு கண்டம் பாயும் "தனுஷ்" ஏவுகணை எவ்வளவு எடை கொண்ட அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது?500 முதல் 1000 கிலோ வரை
453. 2013-ம் ஆண்டில் சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் தங்க கோயிலுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு பிரதமர் யார்?டேவிட் கேமரூன்
454. ரோகினி (RH 200) என்ற ராக்கெட் எந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது?தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்காக
455. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?15
456. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி யார்?ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்
457. இந்தியாவின் 16-வது லோக் சபா சபாநாயகர் யார்?சுமித்ரா மகாஜன்
458. இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமாகியிருக்கும் மாநிலம் எது?தெலங்கானா
459. இந்த ஆண்டு "மேன் புக்கர் பரிசு" யாருக்கு வழங்கப்பட்டது?
ஆஸ்திரேலிய நாட்டு எழுத்தாளர் ரிச்சர்ட் பிளான்கான். The Narrow road to the deep North என்ற நாவலை எழுதியதற்காக
460. இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் யார்?நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா
461. 2013-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா
462. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற போர் விமானம் எந்த நாட்டில் இருந்து வாங்கப்பட்டது?ரஷ்யா
463. 2013-ம் ஆண்டு இந்திய கடற்படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து நடத்திய போர் ஒத்திகையின் பெயர் என்ன?மலபார் 2013
464. Mycidac-C என்ற மலிவு விலை மருந்து எந்த நோய்க்காக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?புற்றுநோய்
465. இந்தியாவில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் திருமணப்பதிவை கட்டாயமாக்கி இருக்கிறதுடெல்லி
466. இங்கிலாந்து அரசின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்கபில்தேவ்
467. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?தென்கொரியா
468. ISIS என்பதன் விரிவாக்கம் என்ன?Islamic State of Iraq and Syria
469. 2013-ம் ஆண்டுக்கான புக்கர் இலக்கியப் பரிசு பெற்றவர் யார் ?
நியூசிலாந்து எழுத்தாளர் எலினர் காட்டன் (தி லூமினரிஸ் என்ற புத்தகத்துக்காக)
470. தமிழ்நாட்டில் மேகமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?தேனி மாவட்டம்
471. 2013-ம் ஆண்டு யாருடைய நினைவாக நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது?
குருதேவ் ரவீந்திரநாத் தாகூர்
472. தமிழ்நாடு காவல்துறையில் உடனடி தொடர்புகொள்ளும் வகையிலான நவீன முறை அமைப்பு டெரா (Terrestrial Trunked Radio-Tetra) எந்தெந்த மாநகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
சென்னை, மதுரை, கோவை,
473. “Target 3 Billion” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
474. முப்பது வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்திவந்த ஒரு கார் கம்பெனி தனது குறிப்பிட்ட ரக காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. அந்த காரின் பெயர் என்ன?மாருதி-800
475. மைக்ரோ சாப்ட் என்ற அகில உலக கணினி நிறுவனத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி யார்?சத்யா நாதெள்ளா
476. 1952 முதல் 2009 வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ரிசாங் கெய்சிங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?மணிப்பூர்
477. போர்ப்ஸ் என்ற மாத இதழால் மீண்டும் உலக கோடீஸ்வரராக குறிப்பிடப்பட்டவர் யார்?பில்கேட்ஸ்
478. கூகுள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யார்?ராஜன் ஆனந்த்
479. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் யார்?அலோக் குமார்
480. “அனைவருக்கும் வீடுஎன்ற மத்திய அரசின் திட்டம் முதன்முதலில் எந்த நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளதுடெல்லி
481. வென்காப் (Vencobb) என்ற பெயர் கொண்டு விளம்பரப்படுத்தப்படுவது எந்த பொருளை குறிக்கிறதுசிக்கன்
482. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியின் பெயர் என்ன?நீதிபதி எம்.ஷா கமிட்டி
483. லிபியா நாட்டின் தலைநகரம் எது?திரிபோலி
484. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்?சந்தீப் சக்சேனா
485. இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் எத்தனையாவது பிறந்தநாள் தற்போது கொண்டாடப்படுகிறது?139-வது பிறந்த நாள்
486. பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் யார்?மார்க் ஷூக்கர்
487. AIRBUS என்ற விமான நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?பிரான்ஸ்
488. அமெரிக்காவின் நாசா மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லவுள்ள அமெரிக்க சிறுமி யார்?
அலிசாகார்சன் (13 வயது)
489. ஐ-போன் நிறுவனமான ஆப்பிள் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?டிம்குக்
490. கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு எது?முத்கல் கமிட்டி
491. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி எது?வாகா
492. தென்கிழக்கு வங்கக்கடலில் அண்மையில் ஏற்பட்ட புயலுக்கு எந்த நாடு "அஷோபா" என பெயரிட்டது?
இலங்கை
493. ஈராக் நாட்டின் தலைநகரம் எது?பாக்தாத்
494. அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் உதவி பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு எவ்வளவு?ரூ.72 ஆயிரம்
495. ஐந்தாயிரம் கி.மீ. வரை பறந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது?
ஒடிசா மாநிலம் பாலாசேர் அருகே உள்ள வீலாஐலண்டு தீவு
496. தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் யார்?Shree காந்த் சீனிவாசன்
497. யாகூ தேடுபொறி (Yahoo Search Engine) எந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது?2004-ம் ஆண்டு
498. ஜனநாயகத்தின் முதல் தூண் என குறிப்பிடப்படுவது?சட்டமன்றம்
499. உலக புத்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஏப்ரல் 23
500. சர்வதேச தண்ணீர் தினம் என்றைக்கு அனுசரிக்கப்படுகிறது?மார்ச் 22
501. டெலிபோன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டில் சிக்கி மூடப்பட்ட பிரபல பத்திரிகையின் பெயர் என்னNews of the World
502. ஆலிவர் ரிட்லி என அழைக்கப்படும் கடல் ஆமைகள் எந்த மாநிலத்தின் கடற்கரையில் காணப்படுகின்றன?ஒடிசா
503. பாகிஸ்தான் பிரதமர் யார்?நவாஸ் ஷெரீப்
504. தீபிகா பலிக்கல் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர்?ஸ்குவாஷ்
505. ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் யார்?சந்தா கோச்சார் என்ற பெண்மணி
506. இந்தியாவில் எந்த மாநிலத்தில் விளக்கு கப்பல் (Light Ship), அதாவது கலங்கரை விளக்கத்துக்குப் பதில் செயல்பட்டு வருகிறது?குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில்
507. சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?மார்ச் 20
508. இந்திய புகையிலை வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?குண்டூர்
509. தமிழ்நாட்டில் அரசு கல்லூரி முதல்வராக முதல்முதலாக கண் பார்வையற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார் ?டாக்டர் பிரபு

510. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சமாக எத்தனை சின்னங்கள் இடம்பெற முடியும்?16

1 comment:

  1. 235. ஆயுர்வேத மருத்துவ முறையில் இருந்து தோன்றிய மருத்துவ முறை எது?சித்த மருத்துவம்

    நல்லா வருவிங்கடா ...
    சித்த மருத்துவத்திலிருந்து வந்ததுதான் டா ஆயுர்வேதம். ஆயுர்வேததில ஒரு ஓலைச் சுவடி கூட இருக்குனு யாராவது கேள்விபட்ருக்கிங்களா... இவங்கள பச்ச மட்டயால வெளுக்கனும்.

    ReplyDelete