மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்
1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்/Mahatma
Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)- அக்டோபர் 2009:
இது
கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
பின்பு இது 2, அக்டோபர்
2009 ஆம் ஆண்டு இதன் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உத்தரவாத சட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
இதன்
திட்டம் கிராமப்புற பகுதியில் வாழும் மக்களுக்கு 100 நாள் வேலைக்கு உத்தரவாதம்
வழங்கியது மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதுகாப்பது ஆகும்,
இந்த திட்டத்தின் முலம் 14 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றது.
இந்த திட்டத்தின் முலம் 14 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றது.
தற்போது
இதன் வேலை நாட்களை 150 நாட்கள் என்று மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது வரும் ஏப்ரல் 2014 இல் அமலுக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சுவர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா/Swarnajayanti
Gram Swarozgar Yojana (SGSY) (SGSY)- ஏப்ரல் 1999:
இது
சுய உதவி குழுக்கள் அமைத்து அந்த அமைப்பின் மூலம் கிராமப்புற ஏழை மக்களுக்கு சுய
வேலைவாய்ப்பு அளிப்பது இதன் குறிக்கோளாகும். இது ஏப்ரல் 1, 1999
அன்று
தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சில மாற்றங்களுடன் 2011 ஆம் ஆண்டு தேசிய ஊரக
வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission- NRLM) என பெயர் மாற்றம்
செய்யப்பட்டது.
3. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா/ Pradhan
Mantri Gram Sadak Yojana (PMGSY)- டிசம்பர் 2000:
பிரதான்
மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) 25 டிசம்பர் 2000 அன்று தொடங்கப்பட்டது. இது
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளையும் இணைப்பு சாலைகள் கொண்டு முக்கிய
சாலைகளுடன் இணைப்பது ஆகும். இந்த திட்டத்திற்க்கான நிதி முழுமையாக மத்திய அரசு
வழங்குகிறது.
4. இந்திரா அவாஸ் யோஜனா/ Indira
Awaas Yojana (IAY)- 1985:
இந்த
திட்டத்தின் நோக்கம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள
தேவையான கட்டுமான பொருட்களுக்கு நிதி உதவி வழங்குவது ஆகும். இதன் முலம் சமதரை
பகுதியில் வாழும் மக்களுக்கு 70,000/- என்றும் மற்றும் மலை போன்ற பகுதியில்
வாழும் மக்களுக்கு ரூ.75,000/- வழங்குகிறது.
கூடுதலாக மொத்த சுகாதாரம் திட்டத்தின் ( Total Sanitation Programme -TSP) கீழ் கழிப்பறை கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டம் 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
கூடுதலாக மொத்த சுகாதாரம் திட்டத்தின் ( Total Sanitation Programme -TSP) கீழ் கழிப்பறை கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டம் 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
5. பாரத் நிர்மாண்/ Bharat Nirman- 2005:
இது
கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் முலம் கிராமங்களில்
1) சாலை இணைப்பு
2) மின் வசதியாக்கம்
3) கிராமப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம்
4) தொலைபேசி இணைப்பு
5) வீட்டு வசதி
6) நீர் பாசனம்
ஆகிய ஆறு முக்கிய திட்டங்கள் கையாளப்படுகின்றன. இது டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மாதிரி அமைப்பான PURA (கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்- Providing Urban Amenities in Rural Areas) வை அடிப்படையாக கொண்டது. முதல் கட்டம் 2009 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது மற்றும் இப்போது இரண்டாம் கட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
1) சாலை இணைப்பு
2) மின் வசதியாக்கம்
3) கிராமப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம்
4) தொலைபேசி இணைப்பு
5) வீட்டு வசதி
6) நீர் பாசனம்
ஆகிய ஆறு முக்கிய திட்டங்கள் கையாளப்படுகின்றன. இது டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மாதிரி அமைப்பான PURA (கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்- Providing Urban Amenities in Rural Areas) வை அடிப்படையாக கொண்டது. முதல் கட்டம் 2009 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது மற்றும் இப்போது இரண்டாம் கட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
6. ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின்/ Jawaharlal
Nehru National Urban Renewal Mission (JNNURM)- டிசம்பர் 2005:
இது
பெரிய நகரங்களை நவீனமயமாக்கல் திட்டம் ஆகும். இது 3 டிசம்பர் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இது ஒரு ஏழு ஆண்டு கால திட்டமாக தொடங்கப்பட்டது, 2012 ஏப்ரல் மாதம் இந்த திட்டம்
மேலும் இரண்டு ஆண்டுகள் நிட்டிக்கப்பட்டது. மார்ச் 31, 2014 ஆம் நாள் இத்திட்டம்
முடிவடைகிறது.
7. சுவர்ண ஜெயந்தி ரோஸ்கார் யோஜனா/ Swarna
Jayanti Shahari Rozgar Yojana (SJSRY):
1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைகளுக்கு சுய தொழில்
மற்றும் கூலி வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும். இதில் பெண்களுக்கு சிறப்பு கவனம்
செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2007 ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது.
8. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்/ Integrated
Child Development Scheme (ICDS):
1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 6 வயது குறைவான வயது உடைய
குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாடு பிரச்சினையை போக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தின்
முக்கிய பயனாளிகள் பெண் குழந்தைகள் தங்கள் இளமை வயது வரை , 6 வயதுக்கு குறைவான குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும்
பாலூட்டும் தாய்மார்கள் ஆகும்.
9. தேசிய ஊரக சுகாதார திட்டம்/ National
Rural Health Mission (NRHM):
முதலில்
7 ஆண்டுகள்
(2005-12) காலத்துக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற
பகுதிகளில் சுகாதார வசதிகளை வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஜனனி
சுரக்ஷா யோஜனா இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
மே 2013 இல் மத்திய அரசாங்கம் தேசிய
ஊரக சுகாதார திட்டத்தை தேசிய சுகாதார திட்டத்தின் (National Health Mission)
கீழ்
ஒரு துணை திட்டமாக கொண்டுவந்துள்ளது.
10. ஜனனி சுரக்ஷா யோஜனா/ Janani
Suraksha Yojana:
இந்த
திட்டம் ஏப்ரல் 12, 2005 இல் தொடங்கப்பட்டது. இது நாட்டில் பிறக்கும் குழந்தைகள் இறப்பை
குறைப்பது இதன் நோக்கம் ஆகும். மருத்துவமனைகளில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை
ஊக்குவிக்கிறது.
11. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்/ Indira
Gandhi National Old Age Pension Scheme:
இந்த
திட்டத்தின் முலம் 65 வயதுக்கு
மேற்பட்ட ஏழைகளுக்கு 200 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவது ஆகும். 80 வயது கடந்தவர்களுக்கு 500 ரூபாய் வழங்குகிறது.
12. ராஷ்டிரிய ஸ்வஸ்த்தி பீமா யோஜனா (தேசிய சுகாதார காப்பீட்டு
திட்டம்)/ Rastriya Swasthya Bima Yojna:
ஏப்ரல்
1, 2008 இல் தொடங்கப்பட்டது. வறுமை கோட்டுக்கும் கீழ் உள்ள மக்களுக்கு
சுகாதார காப்பீடு வசதி வழங்குவது இதன் நோக்கம் ஆகும்.
இதன் முலம் உள்நோயாளி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ 30,000 அளவிற்கு மருத்துவ காப்பிடு வழங்கப்படுகிறது.
இதன் முலம் உள்நோயாளி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ 30,000 அளவிற்கு மருத்துவ காப்பிடு வழங்கப்படுகிறது.
13. ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டம்/ Jawaharlal
Nehru National Solar Mission:
காலநிலை
மாற்றத்தின் மீதான தேசிய செயல் திட்டத்தின் ஒரு பகுதி இத்திட்டம் ஆகும். இது 11 ஜனவரி, 2010 இல் தொடங்கப்பட்டது.
இதன்
முக்கிய அம்சம் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தியின் முலம் 20,000 மெகாவாட் மின்சாரத்தை
உற்பத்தி செய்வது என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
14. ராஜீவ் காந்தி கிராமீன் வித்யூதிகரன் யோஜனா/ Rajiv
Gandhi Grameen Vidyutikaran Yojana:
அனைத்து
கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலும் மின்சார வழங்குதல் மற்றும் ஒவ்வொரு வீடும்
மின்சாரம் பெற்று இருப்பதை உறுதி செய்வது ஆகும். இது மார்ச் 2005 இல் தொடங்கப்பட்டது.
15. ஆம் ஆத்மி பீமா யோஜனா/ Aam
Aadmi Bima Yojna:
கிராமப்புற
பகுதியில் வாழும் நிலமற்ற குடும்பங்களின் குடும்ப தலைவர் காப்பீடு திட்டம் ஆகும்.
இது அக்டோபர் 2, 2007 இல் தொடங்கப்பட்டது. LIC இந்த திட்டத்தை
கையாளுகின்றது.
16. ராஜீவ் அவாஸ் யோஜனா/ Rajiv
Awas Yojna:
இது 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு “குடிசை இல்லாத இந்தியாவை ஊக்குவிக்கும் நோக்கம்” ஆகும் மற்றும் குடிசைவாசிகளின் தரத்தை உயர்த்துவது ஆகும்.
இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு “குடிசை இல்லாத இந்தியாவை ஊக்குவிக்கும் நோக்கம்” ஆகும் மற்றும் குடிசைவாசிகளின் தரத்தை உயர்த்துவது ஆகும்.
17. கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா/ kasturba
gandhi balika vidyalaya:
இது
ஓ.பி.சி, எஸ்சி மற்றும்
எஸ்டி பிரிவை சேர்ந்த பெண் மாணவிகளுக்கு நடுநிலை குடியிருப்பு பள்ளிகள் அமைத்து
தருவது ஆகும். இது 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
18. பொது சுகாதார காப்பீடு திட்டம் / Universal
health Insurance Scheme:
2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராம பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கான
சுகாதார காப்பீடு திட்டம் ஆகும்
19. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா / Pradhan
Mantri Adarsh Gram Yojana:
இது 2009-10
ஆம்
நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இது தாழ்த்தப்பட்ட மக்கள் (50% மேல்) அதிக விகிதம் கொண்ட
கிராமங்களில் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது. கிராமப்புற சாலைகள், குடிநீர் வசதி, வீட்டு வசதி, மின்சாரம் ஆகியவை இதம் முலம்
வழங்கப்படுகிறது.
20. பிரதம மந்திரி ரோஜகர் யோஜனா/ pradhan
mantri rozgar yojana:
இது
அக்டோபர் 2, 1993 ஆம் நாள் தொடங்கப்பட்டது. வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
அளிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சிறுதொழில் தொடங்க
மற்றும் சிறப்பு பயிற்சிகள் இதம் முலம் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment