Thursday 12 February 2015

பிரித்தெழுதுவது

 சில சொற்களையும் அவற்றை எப்படி 

பிரித்தெழுதுவது என்பதையும் காண்போம்.

பைந்தளிர் - பசுமை + தளிர்
புன்மனத்தார் - புன்மை + மனத்தார்
மெல்லடி - மென்மை + அடி
சிற்றில் - சிறுமை + இல்
வெந்தழல் - வெம்மை + தழல்
நற்செங்கோல் - நன்மை + செம்மை + கோல்
தன்னொலி - தன்மை + ஒலி
தீந்தமிழ் - தீம் + தமிழ்
தீஞ்சுடர் - தீமை + சுடர்
பூம்புனல் - பூ + புனல்
அந்நலம் - அ + நலம்
எந்நாள் - எ + நாள்
ஆரிடை - ஆ + இடை
முன்னீர் - முன் + நீர்
இருகரை - இரண்டு + கரை
மூவைந்தாய் - மூன்று + ஐந்தாய்
கீழ்க்கடல் - கிழக்கு + கடல்
கட்புலம் - கண் + புலம்
எஞ்ஞான்றும் - எ + ஞான்றும்
அங்கயற்கண் - அம் + கயல் + கண்
வாயிற்கெடும் - வாயால் + கெடும்
நீனிலம் - நீள் + நிலம்
தெண்ணீர் - தெள் + நீர்
ராப்பகல் - இரவு + பகல்
தேவாரம் - தே + ஆரம்
முட்டீது - முள்+ தீது
வான்மதி - வானம் + மதி
பன்னலம் - பல + நலம்
சீரடி - சீர் + அடி
சீறடி - சிறுமை + அடி
உண்டினிதிருந்த - உண்டு + இனிது + இருந்த
மருட்டுரை - மருள் + உரை
இன்னரும்பொழில் - இனிமை + அருமை + பொழில்
மைத்தடங்கண் - மை + தட + கண்
போதிலார் -போது + இல் + ஆர்
வேறல் - வெல் + தல்
முன்றில் -முன் + இல்
வேப்பங்காய் - வேம்பு + காய்
ஆண்டகை - ஆண் + தகை
இலங்கருவி - இலங்கு + அருவி
சாந்துணை - சாகும் + துணை
கடிதீங்கு - கடிது + ஈங்கு
வேர்கோட்பலவின் - வேர் + கோஷீமீ + பலவின்
மாயங்கொல்லோ - மாயம் + கொல் + ஓ
தங்கால் - தன் + கால்
கொங்கலர்தார் - கொங்கு + அலர் + தார்
நட்பாடல் - நட்பு + ஆடல்
பாம்பெள்ளெனவே - பாம்பு + எள் + எனவே
முயற்காதிலை - முயல் + காது + இலை
செங்காலன்னம் - செம்மை + கால் + அன்னம்
பதினோராண்டுகள் - பதின் + ஓர் + ஆண்டுகள்
கேளிர் - கேள் + இர்
உண்ணிகழ் - உள் + நிகழ்
தீதொரீஇ - தீது + ஓரீஇ

No comments:

Post a Comment